கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை 2024-25 தொடக்கம்

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2024-25 கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 16 முதல் தொடங்குகிறது. விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக மட்டுமே பெறப்படும்.


Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 16, 2024 முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்ட மேற்படிப்பு பயிலகம் வாயிலாக 11 கல்வி வளாகங்களில் 34 துறைகளில் முதுகலைப் படிப்பும், 29 துறைகளில் முனைவர் பட்டப் படிப்பும் வழங்கப்படுகிறது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் (https://admissionsatpgschool.tnau.ac.in/) மூலமாக மட்டுமே பெறப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 30, 2024 நள்ளிரவு 11.59 மணி வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இளங்கலை (வேளாண்மை) மற்றும் அதன் சார்ந்த படிப்புகளை முடித்த மாணவர்கள் முதுகலை பட்டப்படிப்பிற்கும், முதுகலை (வேளாண்மை) அல்லது தோட்டக்கலை / M.Tech (வேளாண் பொறியியல்) முடித்த மாணவர்கள் முனைவர் பட்டப்படிப்பிற்கும் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு சான்றிதழ் (Provisional Degree Certificate) அல்லது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் முந்தைய பருவ மதிப்பெண் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இருப்பினும், பட்டப்படிப்பு சான்றிதழை சமர்பித்த பிறகே மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும்.

மாணவர்கள் முதுநிலை மாணவர் சேர்க்கை (2024-25) குறித்த தகவல் கையேட்டை படித்து, உரிய நேரத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் அல்லது 9489056710 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...