கோவை மாநகராட்சி ஆணையாளர் கவுண்டம்பாளையம் குழந்தைகள் மையத்தில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் கவுண்டம்பாளையம் குழந்தைகள் மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மதிய உணவை பரிசோதித்த ஆணையாளர், டி.வி.எஸ் நகரில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.


Coimbatore: கோவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் இ.ஆ.ப., அவர்கள் "உங்களைத்தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் கவுண்டம்பாளையம் குழந்தைகள் மையத்தை இன்று (18.09.2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவினை உட்கொண்டு பரிசோதித்தார்.

மேற்கு மண்டலம் வார்டு எண்.17க்குட்பட்ட கவுண்டம்பாளையம் குழந்தைகள் மையத்தில் நடைபெற்ற இந்த ஆய்வில், மாநகராட்சி ஆணையாளர் குழந்தைகளுக்கான வசதிகள் மற்றும் பராமரிப்பு குறித்தும் கேட்டறிந்தார்.



இதைத் தொடர்ந்து, அதே வார்டில் உள்ள டி.வி.எஸ் நகரில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகளையும் ஆணையாளர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.



இந்த ஆய்வில் மேற்கு மண்டல குழுத்தலைவர் தெய்வயானை தமிழ்மறை, துணை ஆட்சியர் (பயிற்சி) மது அபிநயா இ.ஆ.ப., மாமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுபஸ்ரீ, சம்பத், உதவி செயற்பொறியாளர் சவிதா, மண்டல சுகாதார அலுவலர் வீரன், உதவி நகர திட்டமிடுநர் காந்திமதி, உதவி பொறியாளர்கள் ராஜேஸ்வேணுகோபால், ஹரிபிரசாத், சுகாதார ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...