கோவை அன்னூர் அருகே குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கோவில் பாளையம் பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட ரவீந்திரன் என்பவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கோவில் பாளையம் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

அண்மையில் கோவில் பாளையம் பகுதியில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி செய்ததாக ஒரு கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டது. அதில் ரவீந்திரன் என்பவரும் ஒருவர். இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு பின்னர் வெளி மாநிலங்களுக்கு தப்பி சென்று பதுங்கி இருந்துள்ளார்.

கடந்த மாதம் கோவில் பாளையம் பகுதியில் வழிப்பறி செய்து விட்டு சிம்லா சென்று பதுங்கி இருந்த ரவீந்திரனை கோவில் பாளையம் போலீசார் அங்கு சென்று கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்தனர். அப்போது போலீசிடம் இருந்து தப்ப முயன்று பள்ளத்தில் விழுந்த ரவீந்திரனுக்கு மாவு கட்டு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவீந்திரன் மீது கோவில் பாளையம் போலீசார் தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த தகவல் சிறையில் உள்ள ரவீந்திரனுக்கு கோப்புகளாக வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...