பொள்ளாச்சியில் வீட்டில் வளர்த்த பூனை கொண்டு வந்த பாம்பால் பெண் உயிரிழப்பு

பொள்ளாச்சி நேரு நகரில், வீட்டில் வளர்த்த பூனை தெருவில் இருந்த பாம்பை உள்ளே கொண்டு வந்ததால், தூங்கிக் கொண்டிருந்த 58 வயது பெண் பாம்பு கடியால் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சி நேரு நகர் பகுதியில் வசித்து வந்த சாந்தி (58) என்ற பெண், தனது மகன் சந்தோஷுடன் வாழ்ந்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது கணவர் ரவி உயிரிழந்தார். சாந்தி தனது வீட்டில் ஒரு பூனை குட்டியை ஆசையாக வளர்த்து வந்தார்.

சம்பவம் நடந்த நாளன்று, வீட்டு வளாகத்தில் ஒரு கொடிய விஷப் பாம்பு சுற்றித் திரிந்தது. இதனைக் கண்ட பூனை, அந்தப் பாம்பைப் பிடித்து வீட்டுக்குள் கொண்டு வந்தது. அப்போது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சாந்தியை பாம்பு கடித்தது.

சாந்தியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சாந்தி உயிரிழந்தார்.

வீட்டில் செல்லமாக வளர்த்த பூனையே உயிருக்கு வினையானது என்ற இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...