கோவையில் போலி பத்திரிகையாளர்களை அடையாளம் காண வாட்ஸ்அப் எண் அறிவிப்பு - மாவட்ட ஆட்சியர்

கோவையில் போலி பத்திரிகையாளர்கள் மோசடியில் ஈடுபடுவதாக புகார்கள் அதிகரித்துள்ளன. இதனை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்ணை அறிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் மோசடி செய்பவர்களை அடையாளம் காண மாவட்ட நிர்வாகம் வாட்ஸ்அப் எண்ணை அறிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் சிலர் அரசு அதிகாரிகளை மிரட்டுவதும், அவர்கள் குறித்து அவதூறு செய்திகளை வெளியிடுவதும் தெரிய வந்துள்ளது. மேலும், உயர் அதிகாரிகளை நன்கு தெரியும் என்று கூறி மக்களிடம் மனுக்கள் மற்றும் பணத்தை பெற்றுக் கொள்கின்றனர்.

அரசு அலுவலகங்கள் முன்பு போலியான அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் செயல்களில் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய நபர்களை கண்காணிக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி கண்டறியப்படும் போது அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பத்திரிகையாளர் என்ற பெயரில் மோசடியில் ஈடுபடும் நபர்களால் பாதிக்கப்பட்டவர்கள் 94980-42423 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு தகுந்த ஆதாரத்துடன் குறுந்தகவல்களை அனுப்பலாம். இந்த எண்ணுக்கு வரும் புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...