கோவை அரசு மருத்துவர்கள் ஈரோடு தொழிலாளியின் தொடையில் இருந்து துப்பாக்கி குண்டை வெற்றிகரமாக அகற்றினர்

ஈரோடு தொழிலாளி செந்தில்குமாரின் தொடையில் பாய்ந்த துப்பாக்கி குண்டை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சிக்கலான அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றினர். முதல்வர் மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர்களை பாராட்டினர்.


கோவை: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி செந்தில் குமார் (45) என்பவரின் வலது தொடையில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறின் போது ஏர்கன் துப்பாக்கியால் சுடப்பட்ட குண்டை கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.

முதலில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட செந்தில்குமார், கட்டுக்கடங்காத ரத்தப்போக்கு காரணமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேனில், ஏர்கன் குண்டு ரத்த நாளத்தை துளைத்து எலும்புக்கு அருகில் தொடையில் ஆழமாக தங்கியிருந்தது கண்டறியப்பட்டது.

நோயாளியின் நிலையை நிலைப்படுத்திய பின்னர், இரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிக்கலான அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இதில், சேதமடைந்த ரத்த நாளம் சரி செய்யப்பட்டு, தொடையில் ஆழமாக தங்கியிருந்த துப்பாக்கி குண்டு வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இதன் மூலம் நோயாளியின் உயிரும் காலும் காப்பாற்றப்பட்டது.

இந்த சிறப்பான சிகிச்சைக்காக, முதல்வர் பேராசிரியர் டாக்டர் அ.நிர்மலா மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர் பேராசிரியர் டாக்டர் கண்ணதாசன் ஆகியோர் இரத்த நாள நிபுணர்கள் டாக்டர் ப.வடிவேலு, டாக்டர் பா.தீபன்குமார் உள்ளிட்டோரை செப்டம்பர் 20 அன்று பாராட்டினர். தற்போது செந்தில்குமார் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப உள்ளார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...