பொள்ளாச்சி அருகே 108 ஆம்புலன்ஸில் பிரசவம்: தாயும் சேயும் நலமுடன் மருத்துவமனையில் அனுமதி

பொள்ளாச்சி அருகே ஜலத்தூரில் 108 ஆம்புலன்ஸில் பெண் பிரசவம் பார்த்து குழந்தை பிறந்தது. ஆம்புலன்ஸ் ஊழியர்களின் துரித செயல்பாட்டால் தாயும் சேயும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஜலத்தூர் பகுதியைச் சேர்ந்த பாலசந்திரன் மனைவி காயத்திரிக்கு இன்று காலை வீட்டில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் ஓட்டுனர் தங்கவேல் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் விரைவாக சம்பவ இடத்திற்கு சென்றனர். காயத்திரியை ஆம்புலன்ஸில் ஏற்றி பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில், பிரசவ வலி அதிகரித்தது.

நிலைமையின் அவசரத்தை உணர்ந்த மருத்துவ உதவியாளர் மணிகண்டன், ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்தார். அவரது சிகிச்சையின் பலனாக, சிறிது நேரத்திலேயே ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமுடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமயோசிதமாக செயல்பட்டு தாய் மற்றும் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ஓட்டுனர் தங்கவேல் மற்றும் மருத்துவ உதவியாளர் மணிகண்டன் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டினர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...