தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் சனநாயக பேரவையினர் முற்றுகைப் போராட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், பட்டியலின அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்ட உபரி நிலங்களுக்கு எஃப் பட்டா கோரி ஆதித்தமிழர் சனநாயக பேரவையினர் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை ஆதித்தமிழர் சனநாயக பேரவை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு ஆதித்தமிழர் சனநாயக பேரவையின் நிறுவனத் தலைவர் பவுத்தன் தலைமை வகித்தார்.

போராட்டக்காரர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை சமர்ப்பித்தனர். அந்த மனுவில், காங்கேயம் வட்டத்திற்குட்பட்ட குண்டடம் ஊராட்சி ஒன்றியத்தின் காடையூர் மற்றும் வட சிண்ணாரி பாளையம் ஆகிய இரண்டு கிராமங்களில் உள்ள வீனம்பாளையம், கல்லாங்காட்டுப்புதூர், பெனங்காளி வலசு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பட்டியலின அருந்ததிய மக்களுக்கு 1994 ஆம் ஆண்டு உபரி நிலம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.



ஈரோடு நில சீர்திருத்த உதவி ஆணையரின் உத்தரவின்படி, காடையூர் கிராமத்தில் 30 பயனாளிகளுக்கும், வட சின்னாரி பாளையம் கிராமத்தில் 21 பயனாளிகளுக்கும் மொத்தம் 51 பயனாளிகளுக்கு உபரி நிலம் வழங்கப்பட்டது. ஆனால், 30 ஆண்டுகள் கடந்தும் இந்த நிலங்களை விவசாயம் செய்வதற்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த நிலங்களை அளவீடு செய்து, விவசாயம் செய்வதற்கான எஃப் பட்டா நகல் உடனடியாக வழங்க வேண்டும் என்று ஆதித்தமிழர் சனநாயக பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், தொடர் போராட்டங்களை நடத்தப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இப்போராட்டத்தில் ஆதித்தமிழர் சனநாயக பேரவையின் மாவட்ட நிர்வாகி சி.கார்த்திக், அம்பேத்கர் மக்கள் இயக்க மாவட்டச் செயலாளர் வி.கே.தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...