கோவை விளாங்குறிச்சியில் புதிய தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல கட்டிடம்: அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு

கோவை விளாங்குறிச்சியில் ரூ.114.16 கோடி செலவில் கட்டப்பட்ட தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல கட்டிடத்தை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தார். இக்கட்டிடம் 3,200 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் என தெரிவித்தார்.



Coimbatore: கோவை விளாங்குறிச்சி பகுதியில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் ரூ.114.16 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இக்கட்டிடம் குறித்த விவரங்களை பகிர்ந்து கொண்டார்.

முந்தைய ஆட்சியில் அறிவிக்கப்பட்டு பல காரணங்களுக்காக நான்கு ஆண்டுகளுக்கு மேல் தாமதமாகி வந்த இக்கட்டிடம் தற்போது ஏறத்தாழ நிறைவடையும் நிலையில் இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முழுவதும் நிறைவடைந்து முதலமைச்சரால் திறந்து வைக்கப்படும் என்றும் கூறினார்.



இந்த வளாகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிய தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும், மொத்தம் 3,200 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தான் நிதி அமைச்சராக இருந்தபோது, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு இணையான அனைத்து வசதிகளுடன் கூடிய ஹைடெக் சிட்டிகளாக கோவை, வடக்கு சென்னை, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளை உருவாக்குவது குறித்து அறிவித்திருந்ததாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், இப்பணிகளை வேகப்படுத்துவதாகவும் உறுதியளித்தார்.



GST தொடர்பாக பேசிய அமைச்சர், தான் நிதி அமைச்சராக இருந்தபோது GST-யில் இருந்த குறைகளை சுட்டிக்காட்டியதாகவும், நல்ல மனதோடு அனைவருக்கும் வாய்ப்பளித்து GST-யில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு நினைத்தால் விரைவில் இதில் திருத்தம் கொண்டு வரலாம் என்றும் தெரிவித்தார்.



இந்த புதிய தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல கட்டிடம் கோவையின் தொழில்துறை வளர்ச்சிக்கு பெரும் உந்துதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...