பத்மஸ்ரீ விருது பெற்ற 110 வயது தேக்கம்பட்டி பாப்பம்மாள் காலமானார்

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் 110 வயதான பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார். இயற்கை விவசாயத்தில் தீராத ஆர்வம் கொண்ட இவர், அண்மையில் பெரியார் விருதும் பெற்றிருந்தார்.



கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 110 வயதான பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி உடல்நலக் குறைவு காரணமாக இன்று இரவு 8:30 மணியளவில் காலமானார்.

விவசாயத்தின் மீது அளவற்ற ஆர்வம் கொண்டிருந்த பாப்பம்மாள் பாட்டி, தனது உயர்ந்த வயதிலும் தொடர்ந்து இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். இவரது விவசாய ஆர்வத்தைப் பாராட்டி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு பாப்பம்மாள் பாட்டிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

விருது வழங்கும் விழாவில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்தில் தமிழ்நாடு அரசின் பெரியார் விருதும் பாப்பம்மாள் பாட்டிக்கு வழங்கப்பட்டது.

வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, அண்மைக் காலமாக படுக்கையிலேயே இருந்து வந்த பாப்பம்மாள் பாட்டி இன்று இரவு காலமானார். அவரது உடல் தேக்கம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாப்பம்மாள் பாட்டியின் மறைவு விவசாய சமூகத்திற்கும், இயற்கை விவசாய ஆர்வலர்களுக்கும் பேரிழப்பாக கருதப்படுகிறது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...