திருப்பூரில் முதல்முறையாக தீபாவளி திருவிழா ஷாப்பிங் எக்ஸ்போ துவக்கம்

திருப்பூரில் தீபாவளியை முன்னிட்டு முதல்முறையாக உற்பத்தியாளர்களின் நேரடி ஆடைகள் விற்பனை திருவிழா தொடங்கியுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் பங்கேற்கின்றனர்.



திருப்பூர்: திருப்பூர் பழங்கரை பகுதியில் உள்ள ஏற்றுமதியாளர்கள் சங்க வளாக கட்டிடமான ஐகேஎஃப் (IKF) இல் தீபாவளியை முன்னிட்டு முதல்முறையாக உற்பத்தியாளர்களின் நேரடி ஆடைகள் விற்பனை திருவிழா தொடங்கியுள்ளது.



மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஆடை கண்காட்சியில் ஏராளமான மக்கள் ஆர்வமுடன் தங்களுக்கான ஆடைகளை வாங்கி செல்கின்றனர்.



திருப்பூரில் உள்ள 150-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் தங்களது ஆடைகளை இந்த கண்காட்சியில் விற்பனைக்காக வைத்துள்ளனர். பின்னலாடையில் என்றும் சிறப்பம்சங்களுடன் திகழும் திருப்பூரில் ஒரே இடத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்குமான ஆடைகளை இந்த கண்காட்சியில் வாங்க முடிகிறது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் ஆடைகள் இந்த கண்காட்சியில் கிடைப்பதும், அதுவும் குறைந்த விலையில் கிடைப்பதும் முக்கியத்துவம் வாய்ந்தது என்கின்றனர் உற்பத்தியாளர்கள். அனைத்து வகையான ஆடைகளும் தரமானதாகவும் குறைந்த விலையில் கிடைப்பதாக வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.



முதல் முறையாக திருப்பூரில் நடைபெறும் இந்த நேரடி விற்பனை எக்ஸ்போவில் 50,000 பேருக்கு மேல் வருகை தரவும், சுமார் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும் என்றும் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். ஒரே இடத்தில் அனைத்து விதமான ஆடைகளும் கிடைப்பது வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...

திருப்பூரில் கட்சித் தலைவர் மீது அவதூறு பரப்பியதாக புகார்

திருப்பூரில் மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமீமுன் அன்சாரி மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் குற்றம் சாட்டி இந்தி...

GCT கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள EVM இயந்திரங்களை கலெக்டர் திடீர் ஆய்வு

கோவை மாவட்டம் 10 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய EVM இயந்திரங்கள் தடாகம் சாலை GCT கல்லூரியில் பாதுகாப்பாக...

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...