கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மது போதையில் நண்பர்களால் இளைஞர் கல்லால் தாக்கி கொலை

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மது போதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், கண்ணன் என்ற இளைஞர் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Coimbatore: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் வளமீட்பு பூங்காவை ஒட்டிய பகுதியில் ஒரு இளைஞர் தலையில் படுகாயங்களுடன் பிணமாக கிடப்பதாக பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் கோவை, சித்தாபுதூர் வெங்கடசாமி ரோட்டைச் சேர்ந்த லோகநாதனின் மகன் கண்ணன் என்பது தெரியவந்தது. கண்ணன் தனது நண்பர்களான கார்த்திக், ரவீந்திரன், சதீஷ் உட்பட ஐந்து பேருடன் சித்தாப்புதூரில் உள்ள ஒரு பாரில் மது அருந்தியுள்ளார்.



பின்னர் வாடகை காரில் பெரியநாயக்கன்பாளையம் வளமீட்பு பூங்கா பகுதிக்கு வந்த அவர்கள், அங்கும் மது அருந்தினர். போதை தலைக்கேறியதும் கண்ணனுக்கும் நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நண்பர்கள் கண்ணனை கருங்கல் மற்றும் பீர் பாட்டிலால் தலையிலும் வயிற்றிலும் பலமாக தாக்கினர். இதில் கண்ணன் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.

சம்பவத்திற்குப் பிறகு கண்ணனின் நண்பர்கள் தப்பியோடி விட்டனர். இந்த கொலை தொடர்பாக பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கார்த்திக், ரவீந்திரன், சதீஷ் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...