இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக இஸ்லாமியர்களை அலைகழிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை என்ற பெயரில் சிபிசிஐடி காவல்துறையினர், இஸ்லாமியர்களை அலைகழிப்பதாக பாபுலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் அளித்தனர்.

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கினை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் இருவரை இதுவரை சிபிசிஐடி காவல்துறையினரால் கைது செய்ய முடியவில்லை. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் ஹரிஹரன் அவர்களிடம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் புகார் மனு அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களக்க பேட்டியளித்த அந்த அமைப்பின் நிர்வாகிகள் கூறுகயில், இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் இஸ்லாமிய இளைஞர்களை துன்புறுத்தி வருகின்றனர். பணம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்கின்றனர்.

விசாரணை என்ற பெயரில் பல முறை தொடர்ச்சியாக அழைத்து பொருளாதார இழப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இஸ்லாமிய இளைஞர்களை விசாரணைக்கு அழைத்து சென்று பல நாட்கள் வைத்துக்கொள்கின்றனர். போனில் யாருடன் பேசினாலும் விசாரித்து மனவுளைச்சளை ஏற்படுத்துகின்னர்" என்றனர். 

மேலும், சிபிசிஐடி காவல்துறையினர் சசிக்குமார் வழக்கை முடிக்கவில்லை என்பதால் பண ஆசை காட்டி இஸ்லாமியர்களை குற்றத்தை ஏற்றுக்கொள்ளும்படி சொல்கின்றனர் என புகார் அளிக்க வந்த பெண்கள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இஸ்லாமிய இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதை தடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல் ஆணையர் அமல்ராஜிடமும் இதுகுறித்தான மனுவினை அளித்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...