திருப்பூர் பனியன் நிறுவனங்களில் விமரிசையாக நடைபெற்ற ஆயுதபூஜை விழா

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஆயுதபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தொழிலாளர்கள் ஏராளமாக பங்கேற்றனர். இயந்திரங்களுக்கு பூஜை செய்யப்பட்டு, வளாகம் அலங்கரிக்கப்பட்டது.



Coimbatore: திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் ஆயுதபூஜை விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான தொழிலாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தொழில் நகரமான திருப்பூரில் இந்த விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்கள் சுத்தம் செய்யப்பட்டன.



ஆயுதபூஜை நாளன்று, நிறுவனங்களின் வாசல்களில் வண்ணக் கோலமிடப்பட்டது. தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இயந்திரங்களுக்கு விபூதி, சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்தனர். பனியன் கம்பெனி வளாகம் முழுவதும் செவ்வந்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. வண்ண காகிதங்கள் மற்றும் மாவிலை தோரணங்கள் கட்டப்பட்டன. வாழைக்கன்று மற்றும் கரும்புகள் நடப்பட்டன. வாகனங்களும் அலங்கரிக்கப்பட்டன.

தொழிலில் பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் பதிவேடுகளை வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தீபாராதனை காட்டப்பட்டு, தொழிலும் தொழிலாளர்களும் நலமுடன் வாழ வேண்டும் என்று வேண்டுதல் செய்யப்பட்டது.

பூஜைக்குப் பிறகு, தொழிலாளர்களுக்கு பொங்கல், சுண்டல், பொறி ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்கப்பட்டது.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...