மேட்டுப்பாளையத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஜ கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு எஸ்.டி.பி.ஜ கட்சி சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாதாந்திர மின் கட்டண கணக்கீடு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.



கோவை: மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு மின் கட்டண உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஜ கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு அண்மையில் மின் கட்டணம் மற்றும் சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரிகளை உயர்த்தி வருவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்படைந்து வருவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.



உயர்த்தப்பட்ட மின் கட்டணம் உள்ளிட்ட வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்றும், திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி மாதம் ஒரு முறை மின் கட்டணம் கணக்கிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.



எஸ்.டி.பி.ஜ கட்சியின் மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் உயர்த்தப்பட்ட வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும், மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கீடு அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...