கோவை மாவட்ட ஆட்சியருடன் இந்திய தொழில் வர்த்தக சபையினர் சந்திப்பு - உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து விவாதம்

கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடியுடன் இந்திய தொழில் வர்த்தக சபையினர் சந்திப்பு நடத்தினர். கோவையின் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து விவாதித்தனர். பல்வேறு திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியை இந்திய தொழில் வர்த்தக சபையினர் நேற்று (அக்டோபர் 11) சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, கோவையின் உள்கட்டமைப்பு மேம்பாடு தொடர்பாக விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த சந்திப்பு குறித்து இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் ராஜேஷ் லுந்த் கூறுகையில், "கிழக்கு புறவழிச்சாலை, விமான நிலைய விரிவாக்கம், கோவை-கரூர் விரைவுச் சாலை, மேட்டுப்பாளையம் மற்றும் சிங்காநல்லூரில் அமையும் மேம்பாலங்கள், எல் அண்டு டி பைபாஸ் விரிவாக்கம், கோவை மாஸ்டர் பிளான், நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் அவற்றை விரைவுபடுத்த வேண்டிய தேவை குறித்து மாவட்ட ஆட்சியருடன் விவாதித்தோம்," என்றார்.

மேலும், "விரைவில் மாஸ்டர் பிளான் வெளியிடப்படும் என்பது உட்பட, நேர்மறையான பதில்களை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். கோவை தொழில் வர்த்தக சபை சார்பில் தொடர்ந்து உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில் வளர்ச்சி குறித்து மாவட்ட நிர்வாகம், மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுவோம்," என்று ராஜேஷ் லுந்த் தெரிவித்தார்.

இந்த முக்கிய சந்திப்பில் தொழில் வர்த்தக சபையின் துணைத் தலைவர்களான நடராஜ், துரைராஜ், செயலாளர்களான பிரதீப், கார்த்திக், மற்றும் பொருளாளர் கைலாஷ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...