மேட்டுப்பாளையத்தில் ஆட்டோவில் சென்ற இளைஞரை பாலியல் தொழில் இடத்திற்கு அழைத்துச் சென்ற மூவர் கைது

மேட்டுப்பாளையத்தில் ஆட்டோவில் சென்ற 30 வயது இளைஞரை பாலியல் தொழில் செய்யும் இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Coimbatore: மேட்டுப்பாளையத்தில் ஆட்டோவில் சென்ற இளைஞரை வலுக்கட்டாயமாக பாலியல் தொழில் செய்யும் இடத்திற்கு அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமுகை ஆலங்கொம்பு பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் நேற்று கோவைக்குச் சென்று திரும்பி வந்தார். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் இறங்கிய அவர், தொடர் மழை காரணமாக ஆட்டோவில் வீடு செல்ல முடிவு செய்தார். அப்போது, ஆட்டோ ஓட்டுநர் சஞ்சீவ்காந்தி (33) என்பவர், இளைஞரை மேட்டுப்பாளையம் சாந்தி நகர் பகுதியில் உள்ள இரண்டு பெண்களிடம் அழைத்துச் சென்றார்.

அங்கு சென்ற இளைஞரிடம் இரண்டு பெண்களும் தகாத முறையில் நடந்து கொண்டனர். உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடிய இளைஞர், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், காரமடை பகுதியைச் சேர்ந்த 39 வயது பெண், திம்மம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சஞ்சீவ்காந்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபட்ட 39 வயது பெண்ணை கோவை மாவட்ட பெண்கள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மற்ற இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ஆட்டோவில் ஏற வந்த பயணியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழில் நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்ற இந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...