கோவை மாநகராட்சி ஆணையர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS, சோமசுந்தரம் மில் சாலை, அவிநாசி மேம்பாலம், சங்கனூர் ஓடை மற்றும் போத்தனூர் பிரதான சாலை பகுதிகளில் குப்பை அகற்றுதல், மழைநீர் வெளியேற்றம் போன்ற பணிகளை ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் IAS அவர்கள், மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.



மத்திய மண்டலத்தில் உள்ள சோமசுந்தரம் மில் சாலை பகுதியில் குப்பைகள் அகற்றும் பணியை நேரில் பார்வையிட்ட ஆணையர், பணியை விரைவாக முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.





அவிநாசி மேம்பாலம் அருகில் மழைநீர் வெளியேற்றும் பணிகளையும் ஆய்வு செய்தார்.







கிழக்கு மண்டலத்தில் உள்ள சிங்காநல்லூர், கள்ளிமடை, கதிரவன் கார்டன், இரயில்வே மேம்பாலம் அருகில் அமைந்துள்ள சங்கனூர் ஓடை செல்லும் நீர்வழித்தடத்தை பார்வையிட்ட ஆணையர், நீர்வழித்தடத்திலுள்ள கழிவுகளை உடனடியாக அகற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



தெற்கு மண்டலத்தில் உள்ள போத்தனூர் பிரதான சாலை பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணிகளையும் ஆணையர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, மாநகர நல அலுவலர் மரு.கே.பூபதி, உதவி ஆணையர் முத்துச்சாமி, உதவி செயற்பொறியாளர் ராஜேஸ்கண்ணா, மண்டல சுகாதார அலுவலர் விஜயகுமார், மண்டல தலைவர் ரெ.தனலட்சுமி, உதவி ஆணையர் (பொ) இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் ஆண்டியப்பன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...