வால்பாறையில் கஞ்சா விற்பனை: இரண்டு பேர் கைது, 2.3 கிலோ கஞ்சா பறிமுதல்

வால்பாறையில் கஞ்சா விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். கல்லூரி மாணவர்கள் கைது தொடர்பான விசாரணையில், மேலும் இரண்டு நபர்களிடமிருந்து 2.3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: வால்பாறையில் கஞ்சா விற்பனை செய்து வந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 2 கிலோ 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி, வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகே கஞ்சா விற்பனை செய்த குற்றச்சாட்டில் கல்லூரி மாணவர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், வால்பாறை நல்லகாத்து எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 20 வயது சுபகார்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார்.

சுபகார்த்தியிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், வால்பாறை காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையிலான குழுவினர் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கு சென்றனர். அங்கு, ஏற்கனவே கடந்த ஆண்டு கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 30 வயது பிசந்தா தந்தா என்பவரை கைது செய்தனர்.



பிசந்தா தந்தாவிடமிருந்து 2 கிலோ 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை வால்பாறைக்கு அழைத்து வந்து வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த நடவடிக்கையில் உதவி ஆய்வாளர் பழனி, தனிப்பிரிவு காவலர் மணிகண்டன் மற்றும் பிற காவலர்கள் ஈடுபட்டனர்.

வால்பாறை பகுதியில் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...

வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆசையில் சிக்கும் இளைஞர்கள்: கோவை போலீசார் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கம்போடியாவில் சைபர் மோசடி கும்பலிடம் சிக்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தென்கிழக்கு ஆச...

கிணத்துக்கடவு தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் வேட்பு மனு தாக்கல்

கிணத்துக்கடவு தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.தாமோதரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்.எல்.ஏ எட்டிமடை சண்முக...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் PRG அருண்குமார் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் PRG அருண்குமார் இன...

ஆனைமலையில் வால்பாறை தொகுதிக்கான தேர்தல் வியூக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

ஆனைமலையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் வால்பாறை சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மதச்சார்பற்ற முற்...

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...