ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்க கேட்டுக்கொண்டனர். தி.மு.க தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்படாததால் ஏமாற்றம் தெரிவித்தனர்.


Erode: தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் கந்தவேல், கருணாநிதி, ஜெகநாதன் ஆகியோர் ஈரோட்டில் தமிழக முதல்வர் Stalin அவர்களை நேரில் சந்தித்து பேசி, மனு அளித்தனர்.




தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் கந்தவேல் கூறியதாவது: "ஈரோட்டுக்கு வருகை தந்த தமிழக முதல்வர் Stalin அவர்களை நேரில் சந்தித்து பேசினோம். தொடர்ந்து அவரிடம் மனு அளித்தோம். அதில், DMK தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் நெசவாளர் நலனுக்காக 16 கோரிக்கைகள் மற்றும் சிறு, குறு தொழில் தொடர்பான திட்டங்களும், ஜவுளித்துறையில் அதிகம் உள்ள சாயக்கழிவு பிரச்சனைக்கு தீர்வு காண வழிவகை செய்யப்படும் போன்ற வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. அதற்கு முதல்வரிடம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்."




"கடந்த ஐந்து ஆண்டுகளில் விசைத்தறி மற்றும் கைத்தறி நெசவாளர்களின் நலனுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழகத்தில் சாதா விசைத்தறிகளை நாடா இல்ல விசைத்தறிகளாக நவீனப்படுத்த முதற்கட்டமாக 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது," என்று அவர் குறிப்பிட்டார்.




"DMK தேர்தல் அறிக்கையில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் பெரிதும் எதிர்பார்த்த இலவச மின்சார அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், அது குறித்து அறிவிப்பு வெளியிடப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் எதிர்பார்ப்பை தேர்தல் வாக்குறுதியாக வெளியீடு செய்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த கேட்டுக் கொள்கிறோம்," என மனுவில் வலியுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...