100 சதவீத வாக்குப்பதிவுக்காக கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி

கோவையில் சட்டமன்றத் தேர்தலுக்கான 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார். 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று செம்மொழி பூங்கா வரை பேரணி சென்றது.


Coimbatore: தமிழக சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar கொடியசைத்து இந்த பேரணியைத் தொடங்கி வைத்தார்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதும், ஏர் பலூனில் பறந்து மாவட்ட ஆட்சியர் வாக்குப்பதிவு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், தேர்தல் உறுதிமொழி ஏற்பு, கல்லூரி மாணவர்களின் ஓவியம் வரைதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு வாகன பேரணி இன்று மேற்கொள்ளப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு வாகன பேரணியில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் பேரணி சென்றனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி அவிநாசி சாலை, எல்லை அம்மன் கோவில், காந்திபுரம் வழியாக செம்மொழி பூங்கா வரை சென்று நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள் பொதுமக்களிடம் நூறு சதவீத வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தேர்தல் என்பது ஜனநாயகத்தின் முதுகெலும்பு என்பதையும், ஒவ்வொரு வாக்கும் மதிப்புமிக்கது என்பதையும் எடுத்துரைத்து மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த பேரணியில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Newsletter

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...

தொண்டாமுத்தூரில் AIADMK வேலுமணி வேட்புமனு: அண்ணாமலை உடன் தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் S.P. வேலுமணி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். BJP முன்னாள் மாந...