சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜய் குறித்து பெண்கள் சரமாரியாக கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது வைரலாக வருகிறது.


Coimbatore: கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில் தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். வாரச்சந்தை காரணமாக மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், காய்கறி வியாபாரிகளிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கி ஆதரவு திரட்டினார்.



அப்போது அங்கிருந்த ஒரு காய்கறி கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த பெண்மணி மற்றும் இரண்டு இளம்பெண்களிடம் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், தங்களது தலைவர் விஜய் ஆட்சிக்கு வந்தால் பெண்களும் பொதுமக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் என தெரிவித்தார்.



இதனைத் தொடர்ந்து, அந்த பெண்கள் வேட்பாளரிடம் பல கேள்விகளை எழுப்பினர். “உங்கள் தலைவர் விஜய் தனது சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை எனச் செய்திகள் வெளியாகின்றன. அப்படியானவர் பொதுமக்களை எப்படி கவனிப்பார்?” என்றும், “உங்கள் கட்சியில் இளம் நிர்வாகிகள் மூத்தவர்களை மரியாதையற்ற முறையில் பேசுவது ஏன்? இதை உங்கள் தலைவர் ஏன் கண்டிக்கவில்லை?” என்றும் கேள்வி எழுப்பினர்.



இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் வேட்பாளர் தயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. உடன் இருந்த கட்சி நிர்வாகிகள் சமாதானப்படுத்த முயன்றபோதும், “ஆதாரத்துடன் பதில் சொல்ல வேண்டும்” என பெண்கள் வலியுறுத்தினர்.

இதனால் அங்கு சிறிய பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்களும் கூடத் தொடங்கிய நிலையில், வேட்பாளர், தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து வெளியேறினார்.

இந்த சம்பவம் அங்கு இருந்த சிலரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...