வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் கைது

நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் அவமதிக்கப்பட்டதை கண்டித்து கோவை வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீட் தேர்வின் போது விதிமுறைகள் என்ற பெயரில் மாணவ, மாணவிகள் அலைகழிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக கேரளாவில் மாணவி ஒருவரின் உள்ளாடை சோதனை என்ற பெயரில் அகற்றப்பட்டது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மேலும், தேர்விற்கு முழுக்கை சட்டை அணிந்து சென்ற மாணவர்களின் சட்டைகள் வெட்டப்பட்டன. மேலும், நீட் வினாத்தாள்  தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒரு மாதிரியாகவும், ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு ஒரு மாதிரியாக இருந்ததாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளது.

இந்நிலையில், மாணவர்களை மன உளச்சலுக்கு ஆளாக்கிய மத்திய அரசை கண்டித்து கோவை வருமான வரித்துறை அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.

அப்போது மாணவர்களுக்கும் போலிசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து வருமான வரித்துறை அலுவலகம் முன்பாக சாலையில் அமர்ந்து போராடிய இந்திய மாணவர் சங்கத்தினர், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், நீட் தேர்வின் போது மாணவர்களை மன அழுத்திற்கு உள்ளாக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...