கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.


Coimbatore: தமிழகத்தில் நாளை மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதால் தேர்தல் களம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தங்களது தொகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



அந்த வகையில், கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட அண்ணா நகர், கலைஞர் நகர், நேரு நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அதற்கு முன்பாக திமுக இளைஞரணி நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் கட்சியினர் இணைந்து இருசக்கர வாகன பேரணியும் நடத்தினர்.

பின்னர் பொதுமக்களிடம் பேசிய அவர், “கழக ஆட்சியின் சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களை சென்றடைந்துள்ளதை உங்கள் வரவேற்பின் மூலம் உணர முடிகிறது. வரும் 23ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவில் உதயசூரியன் சின்னத்திற்கு நீங்கள் ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.



உங்கள் ஆதரவுடன் சட்டமன்றம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால், அங்கே உங்கள் குரலாக ஒலிப்பேன். தொகுதியின் தேவைகளை வலியுறுத்தி நிறைவேற்றப் பாடுபடுவேன். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் போது அரசின் பல்வேறு நலத்திட்டங்களை உங்கள் இல்லங்களுக்கே கொண்டு சேர்க்கும் வகையில் செயல்படுவேன்.

இல்லத்தரசி திட்டம், மகளிர் உரிமைத்தொகை உயர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் நல வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. சொன்னதைச் செய்வது திமுக அரசின் பண்பாகும். தமிழ்நாட்டின் வளர்ச்சியை தொடர உறுதிசெய்ய உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்,” என்றார்.

மேலும், செட்டிபாளையம் பகுதிகளில் பிரச்சார ஏற்பாடுகளை செய்த கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர், உடன்பிறப்புகள் மற்றும் வாகன பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...