வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தார்.


Coimbatore: வால்பாறை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வால்பாறை மலைப்பகுதி, ஜெயிலை தோட்டங்கள், வால்பாறை நகர்ப்பகுதி, கோட்டூர், ஆனைமலை, அங்கலக்குறிச்சி, காளியாபுரம், ஆழியார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்காக அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார்.

அதில், வால்பாறை படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா மறுசீரமைப்பு செய்து விரிவாக்கம் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், பழைய மலைக்கள்ளன் திரைப்படத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்தபோது பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ரோப்வே கார் கேபிள் திட்டம் புதிதாக அமைக்கப்படும் என்றார்.

ஆனைமலை புலிகள் காப்பக எல்லைகள் மறுஅளவீடு செய்து, தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கீழ்மட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் கூறினார்.

இயற்கை சூழலை பாதிக்காத வகையில் ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்படும். வனத்துறை வசூலிக்கும் பல்முனை நுழைவு கட்டணம் அதிமுக ஆட்சி அமைந்ததும் ரத்து செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.

ஆனைமலை ஆறு - நல்லாறு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். வால்பாறை பகுதியில் மாற்றுத்தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும். நர்சிங் கல்லூரி தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கோட்டூர் பகுதியில் தென்னை சார்ந்த மதிப்புக் கூட்டிய பொருட்கள் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி மையம் அமைக்கப்படும். வால்பாறை மார்க்கெட் பகுதியில் பார்க்கிங் வசதியுடன் கூடிய நவீன அடுக்குமாடி கட்டமைப்புகள் உருவாக்கி நகர்ப்புற மேம்பாடு செய்யப்படும் என்றும் லட்சுமண சிங் தெரிவித்தார்.

முன்னதாக வால்பாறையில் அவருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள வந்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறுகையில், அதிமுக ஆட்சிக்காலத்தில் வால்பாறை சுற்றுலா வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட படகு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்த பின்புமுடக்கியது என்று குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...