கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அனைத்து வாகனப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் அவிநாசி சாலையை பயன்படுத்த மாநகர காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


Coimbatore: கோவை உப்பிலிப்பாளையம் முதல் சின்னியம்பாளையம் வரை நீண்டுள்ள ஜிடி உயர்மட்ட மேம்பாலத்தில் அதிவேக வாகன ஓட்டம் தொடர்பான புகார்களை தொடர்ந்து, AI கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், இன்று மற்றும் நாளை இரவு நேரங்களில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.




கோவை ஜிடி உயர்மட்ட மேம்பாலத்தில் இளைஞர்கள் சிலர் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி விபத்தில் சிக்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, முக்கிய மேம்பாலங்களை இரவு நேரங்களில் மூட போலீசார் முதலில் முடிவெடுத்தனர். ஆனால், முன்கூட்டியே மேம்பாலங்கள் பேரிகேடுகளால் அடைக்கப்பட்டதால் மாநகர் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானதால், இந்த திட்டத்தை போலீசார் கைவிட்டனர்.




அதிவேகமாக பயணிக்கும் வாகனங்களை கண்காணித்து AI கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்கும் திட்டம் பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டது. சோதனை அடிப்படையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. தற்போது மீண்டும் கேமராக்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.




இந்நிலையில், இன்று (25ம் தேதி) மற்றும் நாளை (26ம் தேதி) ஆகிய இரு நாட்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறவுள்ளதால், ஜிடி உயர்மட்ட மேம்பாலத்தில் இரவு 10 மணி முதل் காலை 6 மணி வரை அனைத்து வகையான வாகனப் போக்குவரத்துகளும் முற்றிலுமாக தடை செய்யப்படுகின்றன.




எனவே, இரண்டு நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் வாகன ஓட்டிகள் ஜிடி உயர்மட்ட மேம்பாலத்தை பயன்படுத்தாமல், மாற்று வழியாக அவிநாசி சாலையை பயன்படுத்துமாறு கோவை மாநகர காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை கவனத்தில் கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார்

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனார், மாநகராட்சி ஆணையாளர்  மா. சிவகுரு பிரபாகரன் ஆகியோர் குறிச்சி அணைக...

TVK-AIADMK Alliance Will Disappoint Voters Who Voted Against Corruption: Congress Leader Ganapathy Sivakumar

Ganapathy Sivakumar, State General Secretary of the Tamil Nadu Congress Committee, has cautioned that reports suggesting...

அதிமுக கூட்டணி?: தவெகவை நம்பி வாக்களித்த மக்களிடையே அதிருப்தி ஏற்படும்- காங்கிரஸ் தலைவர் கருத்து

ஊழலற்ற ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வாக்களித்துள்ளனர், எனவே த.வெ.க மற்றும் அதிமுக இடையிலான கூட்டண...

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...