கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் சோதனை நடத்தினர். எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. டார்க் நெட் பயன்படுத்தும் மிரட்டல் குழுவை கண்டறிய Anti Terrorism Squad விசாரணை துவங்கியுள்ளது. இதுவரை 35 முறைக்கு மேல் இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன.


Coimbatore: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக இன்று காலை இ-மெயில் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.

கோவை மாநகர போலீசின் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர் குழு மற்றும் மோப்பநாய் பிரிவினர் கலெக்டர் அலுவலகத்தில் விரிவான சோதனை நடத்தினர். தேர்தல் பிரிவு, கலெக்டர் அலுவலக அறை, மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் அலுவலகம், ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

முழுமையான சோதனையின் பின்னர் எந்தவிதமான வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இது ஒரு பொய் மிரட்டல் என்பது உறுதியானது.

கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது. இந்த மிரட்டல் இ-மெயில்களை அனுப்பும் குழுவினர் டார்க் நெட் என்ற வெப்சைட்டைப் பயன்படுத்துகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தளத்தின் மூலம் மெயில் அனுப்பினால் பல நாடுகளில் இருந்து அனுப்புவது போன்ற IP முகவரி காட்டப்படும். இதனால் யார் அனுப்பினார்கள் என கண்டறிவது மிகவும் கடினமான பணியாகும். எனவே இந்த வழக்கை விசாரிக்க Anti Terrorism Squad என்ற தீவிரவாத தடுப்பு குழு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

தற்போது இந்த சிறப்பு குழுவினர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் குறித்து தீவிர விசாரணையை துவக்கி உள்ளனர். நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி குற்றவாளிகளைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம் மட்டுமின்றி பாஸ்போர்ட் அலுவலகம், தபால் அலுவலகம் மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்களுக்கும் பலமுறை வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கிறது. இது பொது நிர்வாகத்தில் பெரும் இடையூறை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், கலெக்டர் அலுவலகத்திற்கு இன்றுடன் சேர்த்து 35 முறைக்கு மேல் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு முறையும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்த வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் மிரட்டல்கள் அரசு ஊழியர்கள் மத்தியில் அச்சத்தையும், பணி சூழலில் பதற்றத்தையும் உருவாக்கி வருகின்றன. போலீசார் விரைவில் குற்றவாளிகளைக் கைது செய்ய தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...