சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்விளக்கு பொருத்துதல் போன்ற இறுதிக்கட்ட பணிகள் முடிந்ததும் ஜூன் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.


Coimbatore: கோவை மாநகரில் காந்திபுரம், உக்கடம், ஆர்எஸ்புரம் ஆகிய பகுதிகளை இணைக்கும் ரவுண்டானா முக்கியமான போக்குவரத்து மையமாக திகழ்கிறது. மேட்டுப்பாளையம் சாலையில் தினசரி அதிக போக்குவரத்து நெரிசல் காணப்படுவதால், போக்குவரத்தை சீராக்க சாய்பாபா காலனியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது.




கோவையில் கடந்த 20 ஆண்டுகளில் மக்கள் தொகை அடர்த்தி கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பெருகி வருகிறது. இந்த சவாலை எதிர்கொள்ள கடந்த 15 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவினாசி சாலையில் 10 கிலோமீட்டர் நீள மேம்பாலம், ராமநாதபுரம் மேம்பாலம், காந்திபுரம் மேம்பாலம், நீலாம்பூர் மேம்பாலம், உக்கடம் மேம்பாலம், துடியலூர் மேம்பாலம், ஆத்துப்பாலம் மேம்பாலம் என பல்வேறு மேம்பாலங்கள் கட்டப்பட்டு நெரிசல் ஓரளவு குறைக்கப்பட்டுள்ளது.




அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி, ஜி.என்.மில், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் ஆகிய நான்கு இடங்களில் மேம்பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. இவற்றில் சாய்பாபா காலனி தவிர மற்ற மூன்று மேம்பாலங்களும் முடிந்து பயன்பாட்டில் உள்ளன. கங்கா மருத்துவமனை முதல் எருக்கம்பெனி வரை 1.2 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.75 கோடி மதிப்பீட்டில் சாய்பாபா காலனி மேம்பால பணிகள் கடந்த 2024 செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.




தொடக்கத்தில் பணிகள் மெதுவாக நடைபெற்றதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பவன் குமார் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பணிகளை விரைவுபடுத்த அறிவுறுத்தினார். அதன்பிறகு மேம்பால பணிகள் தீவிரமடைந்தன. பணிக்கு இடையூறாக இருந்த உயர் அழுத்த மின்சார கம்பிகள் மாற்றி அமைக்கப்பட்டன. தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.




நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: "சாய்பாபா காலனி மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனி பகுதியில் இறங்குதளம் அமைத்தல், மேம்பாலத்தில் மின்விளக்குகள் பொருத்துதல், வர்ணம் பூசுதல் உள்ளிட்ட சில பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளன. இவை முடிந்ததும் ஜூன் மாதத்தில் மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்" என்றனர்.




இந்த மேம்பாலம் திறக்கப்பட்டதும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காந்திபுரம், உக்கடம், ஆர்எஸ்புரம் பகுதிகளுக்கு பயணிப்பவர்களுக்கு இது பெரும் நிவாரணமாக அமையும்.


Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...