அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக பிரதிபலிக்கும் என்று கோவையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு உற்சாகமாக நடைபெற்றதாக குறிப்பிட்ட அவர், பல கருத்துக்கணிப்புகளும் NDA-வின் முன்னிலை குறித்து ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்தார். திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக பிரதிபலிக்கும் என்றும், மாற்றத்திற்காக மக்கள் காத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

mAnypN3mfQkYmS3PH6cdnFvV1ptg4bFVR49OnHT0.jpg

தமிழகத்தில் ‘டபுள் இன்ஜின்’ அரசு அமைந்தால் மாநில வளர்ச்சிக்கு புதிய திசை கிடைக்கும் எனவும், மக்களின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும் எனவும் தெரிவித்தார். மேலும், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் எதிர்பார்ப்புகளை மீறி பாஜக வெற்றி பெற்றதை நினைவுகூர்ந்த அவர், தமிழக அரசியலிலும் பெரிய மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போக்குவரத்துத் துறை ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “ஊழல் சம்பவங்கள் விசாரணைகள் மூலம் வெளிச்சத்துக்கு வரும்; சட்டம் தனது கடமையைச் செய்யும்” என்றார்.

அதேபோல், அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, “நிச்சயம் வழங்கப்படும்” என உறுதியான பதில் அளித்தார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...