போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா நாடுகளுக்கு சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சலுகை விலையில் கிடைக்கும் சுற்றுலா பேக்கேஜ்கள் இதற்கு முக்கிய காரணம்.


Coimbatore: கோடைகால விடுமுறையையொட்டி கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளை தவிர்த்து தென்கிழக்கு ஆசிய நாடுகளை நோக்கி கோவை மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூர், டெல்லி உள்ளிட்ட உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய இரு வெளிநாடுகளுக்கும் நேரடி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. தினமும் சராசரியாக 32 விமானங்கள் வரை இயக்கப்படுகின்றன. தினமும் 10,000 பேர் விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.


விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், "கோடைகால விடுமுறையை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் உள்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்லும் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து தினமும் அதிகரித்து காணப்படுகிறது. ஈரான்-இஸ்ரேல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் இடையே நடக்கும் போர் காரணமாக வளைகுடா நாடுகள் வழியாக செல்வதை பெரும்பாலான பயணிகள் தவிர்த்து விட்டனர்" என்றனர்.


இதற்கு மாறாக கோவையிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, வியட்நாம், பாங்காக் போன்ற நாடுகளுக்கு கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பலர் தொடர்ந்து சென்று வருகின்றனர். முன்பு வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது என்பது மிகப்பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்ற நிலை காணப்பட்டது.


தற்போது பல தரப்பு மக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் வகையில் சலுகை விலையில் சுற்றுலா பேக்கேஜ் பல்வேறு வெளிநாடுகளுக்கு பல்வேறு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படுகிறது. இதன் காரணமாக விடுமுறை நாட்களில் உள்நாடு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளிலிருந்து சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை தொடரும் காரணத்தால் கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் காணப்படும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...