ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து முழக்கங்கள் எழுப்பிய அவர்கள், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினர்.


கோவை:

இந்திய ரயில்வே துறையில் பணியாளர்கள் குறைக்கப்படுவதை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



அண்மையில் ரயில்வே வாரியம், 14.8 லட்சம் பணியிடங்களில் சுமார் 2 சதவீதத்தை இந்த ஆண்டில் குறைக்க முடிவு செய்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ரயில் சேவைகள் அதிகரித்து வரும் நிலையில், பணியாளர்கள் குறைப்பு பாதுகாப்பு மற்றும் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இந்த முடிவிற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையம் முன்பு மத்திய அரசுக்கு எதிராக பதாகைகள் ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.



ஆர்ப்பாட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா, ரயில்வே துறையில் ஏற்கனவே 30,000 பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், சமீபத்தில் அவை நிரப்பப்படாமல் ஆட்கள் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.

காலியான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது விபத்துகளுக்கு காரணமாக அமைந்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், இப்படிப்பட்ட சூழலில் பணியாளர்கள் எண்ணிக்கையை குறைப்பது ரயில்வே துறைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் கூறினார். ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படுவதால் வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், பிரதமர் அளித்த வேலைவாய்ப்பு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டிய அவர், உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், பொதுத்துறையை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...