காதல் விவகாரத்தில் தற்கொலை குறுஞ்செய்தி அனுப்பிய கோவை கல்லூரி மாணவி மாயம்

கோவையில் தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த கேரளாவைச் சேர்ந்த 23 வயதான கல்லூரி மாணவி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.


கோவை: கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மயக்கமருந்தியல் படிப்பை முடித்த பின், அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில், அவருடன் படித்த மாணவருடன் காதலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெற்றோர், அந்த உறவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், சில நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் தொடர்பு கொண்டு காதலை கைவிடுமாறு அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் மனவேதனை அடைந்த மாணவி, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றபோது, மாணவியின் செல்போன் அணைக்கப்பட்டிருந்தது.

உடனடியாக கோவைக்கு வந்த பெற்றோர், மாணவி தங்கி இருந்த அறையை பார்த்தபோது அவர் அங்கு இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...