உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.


Tiruppur: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள முரீது பாபா தர்காவில் 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழா சிறப்பாக நடைபெற்றது.



உரூஸ் கந்தூரி விழா என்பது இஸ்லாமிய சூபி ஞானிகளின் நினைவு நாளில் தர்காக்களில் கொண்டாடப்படும் புனித விழா ஆகும்



இந்த விழா கடந்த மாதம் 19ஆம் தேதி தாஹிர் ஷா வலியல்லாஹ் தர்கா வளாகத்தில் கொடி ஏற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதன் தொடர்ச்சியாக, நேற்று இரவு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வாக மவ்லீது ஒதப்பட்டு, இஸ்லாமிய பெரியவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஆன்மீக உரைகள் நிகழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து கந்தூரி எனப்படும் அன்னதானம் நடைபெற்றது. மேலும் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் ‘சந்தன உருஸ்’ நிகழ்வின் ஒரு பகுதியாக சந்தனக்குடம் முரீது பாபா தர்காவிற்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்களுக்கு சந்தனம் மற்றும் தப்ரூத் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சைய்யத் சுல்தான் ஷா காதிரி (சஜ்ஜாதா நஷீன்), எம். மூசா, காதிரி, கா. அப்பாஸ், அசன் பாஷா, அபூபக்கர் உள்ளிட்ட உலமாக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். சாதி, மத பேதமின்றி பொதுமக்கள் திரளாக பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...