விஜயா வங்கியின் வளர்ச்சி உயர்ந்துள்ளதாக மேலான் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிஷோர் சான்சி பேட்டி

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விஜயா வங்கியின் வளர்ச்சி உயர்ந்துள்ளதாகவும், வராகடன் சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் மேலான் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிஷோர் சான்சி பேட்டி அளித்துள்ளார்.

விஜயா வங்கியின் மேலான் இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிஷோர் சான்சி இன்று அவிநாசி சாலையில் உள்ள விஜயா வங்கி அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறுகையில், வங்கியின் வளர்ச்சியில் வீட்டுக் கடன் முக்கிய பங்கு வகிக்கிறது.

தற்போது புதிதாக 168 கிளைகள் திறக்கபட்டுள்ளது. மேலும் கிளைகள் துவக்க வங்கி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. பனியன் உற்பத்தியாளர்கள் அதிகம் உள்ள திருப்பூரில் பணிபுரியும் ஊழியர்கள் பலன் பெறும் வகையில் கிளைகள் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விவசாய கடன்களைப் பொருத்த வரையில் பண தேவைக்காக அதிக வட்டியில் வெளியாட்களிடம் கடன் பெற்றவர்களுக்கு பத்திரத்தை மீட்டு 8 சதவிகிதம் மற்றும் 9 சதவிகிதம் குறைந்த வட்டியில் விவசாயிகளுக்கு கடன்கள் விஜயா வங்கி வழங்குகிறது. மேலும் வங்கி தொழில்துறையினர், கல்வி கடன் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக கவனம் செலுத்தபடுகிறது. கடந்த சில மாதங்களில் வாடிக்கையாளர்கள் மொபைல் பேங்கிங் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது" என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...