பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல்வி உதவித்தொகைகளை அக்கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் அனுஷா ரவி அறிமுகப்படுத்தினார்.


Coimbatore: பார்க் கல்விக் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட “Zero G 2026” என்ற இரண்டு நாள் கலாச்சார விழா கோவை கனியூர் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு பொறியியல் கல்லூரி இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 22 கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று, 30-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப மற்றும் கலாச்சார போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

விழாவின் முதல் நாளில் பின்னணிப் பாடகர் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா மற்றும் நடிகை, பாடகி மடோனா செபாஸ்டியன் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கருமத்தம்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரி சங்கர் மற்றும் நடிகர் ரியோ ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, கல்வி, விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களை கவுரவித்தனர்.

விழாவில் பார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் அனுஷா ரவி பேசுகையில், “ஒவ்வொரு முன்னாள் மாணவரின் வீட்டிலிருந்தும் ஒரு தொழில்முனைவோர் உருவாக வேண்டும்” என்பதே கல்விக் குழுமத்தின் நோக்கம் என தெரிவித்தார்.

மேலும், இந்த ஆண்டு முதல் “நம்பிக்கை கல்வி உதவித்தொகை” மற்றும் “சக்தி கல்வி உதவித்தொகை” ஆகிய இரண்டு புதிய கல்வி உதவித்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

முதற்கட்டமாக, பெற்றோரை இழந்த மாணவர்கள் உயர்கல்வி தொடர உதவும் வகையில் “நம்பிக்கை” கல்வி உதவித்தொகை ஏ.ஐ மற்றும் டேட்டா சயின்ஸ் துறையில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவருக்கு வழங்கப்பட்டது.

அதேபோல், மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்வி பெற உதவும் நோக்கில் “சக்தி” கல்வி உதவித்தொகை கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் துறையில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவருக்கு வழங்கப்பட்டது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...