பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளில் குவிந்து வருகின்றனர். சேர்க்கை விண்ணப்ப விநியோக பணிகள் இன்று முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


கோவை: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், கோவையில் உள்ள முன்னணி கல்லூரிகளில் உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டத் தொடங்கியுள்ளன.



தேர்வு முடிவுகள் வெளியான சில மணி நேரங்களிலேயே, மாணவ - மாணவிகள் தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்வதற்காக கல்லூரிகளில் குவிந்தனர். குறிப்பாக தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் மற்றும் முன்பதிவு பணிகள் இன்று முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மாணவர்கள் தங்களது தற்காலிக மதிப்பெண் பட்டியலுடன் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களுடன் கல்லூரிகளுக்கு நேரில் வந்து, விருப்பமான பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை தொடர்பான தகவல்களை அறிந்து பதிவு செய்து வருகின்றனர்.



குறிப்பாக பி.காம் (B.Com (http://b.com/)), பி.எஸ்சி ஐ.டி (B.Sc IT), கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் நவீன தொழில்நுட்ப பாடப்பிரிவுகளுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.

மேலும், மாணவர்களின் சந்தேகங்களுக்கு தீர்வு வழங்கும் வகையில் பல கல்லூரிகளில் பிரத்யேக உதவி மையங்கள் (Help Desk) அமைக்கப்பட்டுள்ளன. இதில், மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களுக்கு ஏற்ப எந்தப் பாடப்பிரிவு அவர்களுக்கு ஏற்றது, எதிர்கால வேலைவாய்ப்பு வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பது குறித்து கல்வி ஆலோசகர்கள் விளக்கமளித்து வருகின்றனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளில் குவிந்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...