12,522 மெட்ரிக் டன் உர இருப்பு கோவையில்; முறைகேடு செய்தால் உரிமம் ரத்து

கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடைப்பயிர் சாகுபடிக்காக 12,522 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் மீ. தமிழ்செல்வி தெரிவித்துள்ளார். மண் பரிசோதனை செய்து உரம் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டத்தில் வரவிருக்கும் கோடை மற்றும் பயிர் சாகுபடிக்காக மொத்தம் 12,522 மெட்ரிக் டன் உரங்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை இணை இயக்குநர் மீ. தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.

இந்த மொத்த இருப்பில் யூரியா 3,176 மெட்ரிக் டன், டிஏபி 1,458 மெட்ரிக் டன், பொட்டாஷ் 2,033 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 1,342 மெட்ரிக் டன் மற்றும் காம்ப்ளெக்ஸ் உரங்கள் 4,513 மெட்ரிக் டன் ஆகியவை மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் பொதுவாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் மண் பரிசோதனை செய்து அதற்கேற்ப உரங்களை பயன்படுத்தவும், அல்லது "தமிழ் மண் வள செயலி" பரிந்துரைப்படி உரங்களை பயன்படுத்தவும் வேளாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.

உர விற்பனையாளர்கள், விவசாய நிலப்பரப்பு மற்றும் பயிர் தேவைக்கு ஏற்ப ஆதார் எண்ணை பதிவு செய்து மட்டுமே உரங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயியின் கைப்பேசி எண் மற்றும் கையொப்பத்துடன் ரசீது வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

நோனோ யூரியா, நோனோ டிஏபி, உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் பயன்படுத்துவதன் மூலம் உர பயன்பாடு குறைந்து மண் வளம் அதிகரித்து, செலவும் குறையும் என வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.

உர விற்பனையில் முறைகேடுகள் அல்லது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் வேளாண்மை இணை இயக்குநர் மீ. தமிழ்செல்வி எச்சரித்துள்ளார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...