கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சிரமம் அடைந்தனர். புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.


Coimbatore: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே எச்சரித்திருந்தது. அதன்படி கோவையில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், மாலை வேளையில் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.






கோவை மாநகரில் உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்ததன் காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வேலை முடிந்து வீடுகளுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர்.




அதேபோன்று கோவை புறநகர் பகுதிகளான தடாகம் சாலை, இடையர்பாளையம், TVS நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. குறிப்பாக உக்கடம் பகுதியில் பேருந்து நிறுத்தத்திற்கு முன்பு குளம் போன்று மழைநீர் தேங்கி நின்றதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளானர்.




திடீர் மழையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மெதுவாக பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மழை பெய்ததால் வெயிலில் இருந்து நிவாரணம் கிடைத்த நிலையில், வடிகால் வசதிகள் முறையாக இல்லாத பகுதிகளில் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...