PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தி திணிப்பு மற்றும் BJP ஊடுருவல் முயற்சி என்று குற்றம் சாட்டி புதிய அரசு திட்டத்தை ஏற்கக் கூடாது என வலியுறுத்தினர்.


Coimbatore: மத்திய அரசின் PM Shri திட்டத்தை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள BSNL அலுவலகம் முன்பு 30க்கும் மேற்பட்ட கழகத்தினர் திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மத்திய அரசு நாடு முழுவதும் 14,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை தேர்ந்தெடுத்து நவீன வசதிகளை கொண்டுவரும் வகையில் PM Shri திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது. தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் இந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றன. இந்த திட்டம் கொண்டுவரப்பட்டால் இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்றும், இது இந்தி மொழியை திணிக்கும் செயல் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசு தற்போது இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டி வரும் நிலையில், அதற்கு எதிரான கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற கழகத்தினர், இந்த திட்டம் இந்தி மொழியை திணிக்கும் செயல் என்றும், மறைமுகமாக BJP ஊடுருவ முயற்சிக்கும் செயல் என்றும் தெரிவித்தனர். புதிதாக பொறுப்பேற்க உள்ள மாநில அரசும் இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தினர்.

இது குறித்து பேட்டி அளித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், "இந்த திட்டம் மறைமுகமாக BJP தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் செயல். இது இந்தியை திணிக்கும் செயல். புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசு இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது. திராவிட முன்னேற்ற கழகம் எவ்வாறு இந்த திட்டத்தை எதிர்த்து போராடியதோ அதுபோலவே எதிர்த்து இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது" என வலியுறுत்தினார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...