PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்தி திணிப்பு மற்றும் BJP ஊடுருவல் முயற்சி என்று குற்றம் சாட்டி புதிய அரசு திட்டத்தை ஏற்கக் கூடாது என வலியுறுத்தினர்.


Coimbatore: மத்திய அரசின் PM Shri திட்டத்தை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம் நடத்தி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள BSNL அலுவலகம் முன்பு 30க்கும் மேற்பட்ட கழகத்தினர் திரண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மத்திய அரசு நாடு முழுவதும் 14,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை தேர்ந்தெடுத்து நவீன வசதிகளை கொண்டுவரும் வகையில் PM Shri திட்டத்தை செயல்படுத்த முயற்சிக்கிறது. தமிழ்நாடு உட்பட சில மாநிலங்கள் இந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றன. இந்த திட்டம் கொண்டுவரப்பட்டால் இந்தி மொழி கட்டாயமாக்கப்படும் என்றும், இது இந்தி மொழியை திணிக்கும் செயல் என்றும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மத்திய அரசு தற்போது இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டி வரும் நிலையில், அதற்கு எதிரான கண்டனங்கள் வலுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற கழகத்தினர், இந்த திட்டம் இந்தி மொழியை திணிக்கும் செயல் என்றும், மறைமுகமாக BJP ஊடுருவ முயற்சிக்கும் செயல் என்றும் தெரிவித்தனர். புதிதாக பொறுப்பேற்க உள்ள மாநில அரசும் இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தினர்.

இது குறித்து பேட்டி அளித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன், "இந்த திட்டம் மறைமுகமாக BJP தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் செயல். இது இந்தியை திணிக்கும் செயல். புதிதாக பொறுப்பேற்க உள்ள அரசு இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது. திராவிட முன்னேற்ற கழகம் எவ்வாறு இந்த திட்டத்தை எதிர்த்து போராடியதோ அதுபோலவே எதிர்த்து இந்த திட்டத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது" என வலியுறுत்தினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...