மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்பு மூலம் நிதி பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது. தமிழக தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.


Coimbatore: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் தமிழக தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ஜெயபால் கூறும் போது, தமிழக முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும். குறிப்பாக உள்நாட்டு சந்தையில் தமிழ்நாட்டை விட 10போட்டி மாநிலங்களில் மின் கட்டணம் குறைவாக உள்ளது எனவே தொழில் முனைவோரின் நீண்ட நாள் கோரிக்கையான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.



15 ஆண்டுகளாக புதிய தொழில் கொள்கை வகுக்கப்படவில்லை எனவே தமிழக தொழில் நலனை கருத்தில் கொண்டு விரைவாக தொழில் கொள்கை வகுக்க வேண்டும். இவை எல்லாவற்றுக்கு மேல் கடந்த காலங்களில் காணப்பட்டது போல மத்திய அரசுடன் தமிழக அரசு மோதல் போக்கை கடைபிடிப்பதை தவிர்த்து தமிழ்நாட்டுக்கு தேவையான நிதி, மானியம் மற்றும் பிற சலுகைகளை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பொருளாளர் சாஸ்தா ராஜா ஆகியோர் கூறும்போது, தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

இலவசமாக 200 யூனிட் வரை மின்சாரம் வழங்குவதால் அவற்றை முழுமையாக பயன்படுத்த உதவும் வகையில் ஒரு பர்னர் அல்லது இரண்டு பர்னர் கொண்ட இன்டக்ஷன் ஸ்டவ் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எலக்ட்ரிக் குக்கர் இணைந்து உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

இதனால் உள்ளூர் தொழில் வளரும். அதேபோல் பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் இலவசமாக வழங்குவதற்கு பதில் ஒரு ஆண்டுக்கு கணக்கிட்டு30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மாவு அரைக்கும் இயந்திரம், சிறுதானியங்கள் அரைக்கும் இயந்திரம் உள்ளிட்ட வீட்டிலிருந்தே சிறிய அளவில் தொழில் செய்து சம்பாதித்துக் கொள்ள தேவையான உபகரணங்களை பெண்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு வழங்கப்படும் தொகையை தமிழக அரசு குறிப்பிட்ட வங்கிகளுக்கு செலுத்தலாம். இதன் மூலம் பெண்களுக்கு இலவசமாக பணம் வழங்குவதற்கு மாற்றாக அவர்களை தொழில் முனைவோராக மாற்றவும் சுயமாக சம்பாதித்து தன்னம்பிக்கை வளர்த்துக் கொள்ளவும் பெரிதும் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...