எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத் தலைவராக கே.என்.நேரு, கொறடாவாக எ.வ.வேலு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


சென்னை: தமிழக சட்டப்பேரவையின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க உள்ளார். திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழக முதல்வராக சி.ஜோசப் விஜய் இன்று (மே 10) பதவியேற்றுள்ள நிலையில், நாளை மே 11ஆம் தேதி நடைபெறவுள்ள 17வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக தனது பணியைத் தொடங்கவுள்ளார்.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. மேலும், திமுக தலைவர் மற்றும் முன்னாள் முதல்வரான மு.க.ஸ்டாலின், அவர் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியடைந்தது அரசியல் வட்டாரங்களிலும் திமுக நிர்வாகிகளிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால், திமுக சட்டமன்றக் குழுத் தலைவராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் யார் பெயர் முன்மொழியப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்தச் சூழலில், தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் கடந்த மே 7ஆம் தேதி மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, திமுக சட்டமன்றக் குழுத் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம், அவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட உள்ளார்.

மேலும், சட்டமன்றக் குழு துணைத் தலைவராக கே.என்.நேரு மற்றும் கொறடாவாக எ.வ.வேலு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...