கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மே 11 நிலவரப்படி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாட்டு அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Coimbatore: கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ள முக்கிய அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மே 11 ஆம் தேதி நிலவரப்படி பல அணைகளில் இருந்து கணிசமான அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணை 120 அடி முழு கொள்ளளவு கொண்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் மே 11 நிலவரப்படி 60.2 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 133 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால் மே 11 நிலவரப்படி 32.9 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 76 கன அடி நீர் வரத்து இருக்கும் நிலையில், 1140 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



வால்பாறை சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. மே 11 நிலவரப்படி 12.13 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 30 கன அடி நீர் வரத்து இருக்கும் நிலையில், 05 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. தொடர் நீர் வரத்தால் மே 11 நிலவரப்படி 22.8 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 393 கன அடி நீர் வரத்து உள்ளது.



உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. மே 11 நிலவரப்படி 40.82 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 709 கன அடி நீர் வரத்து இருக்கும் நிலையில், 257 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...