கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மே 11 நிலவரப்படி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் கட்டுப்பாட்டு அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Coimbatore: கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அமைந்துள்ள முக்கிய அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மே 11 ஆம் தேதி நிலவரப்படி பல அணைகளில் இருந்து கணிசமான அளவில் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணை 120 அடி முழு கொள்ளளவு கொண்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் மே 11 நிலவரப்படி 60.2 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 133 கன அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணை 72 அடி கொள்ளளவு கொண்டது. தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்தால் மே 11 நிலவரப்படி 32.9 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 76 கன அடி நீர் வரத்து இருக்கும் நிலையில், 1140 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



வால்பாறை சோலையாறு அணை 160 அடி கொள்ளளவு கொண்டது. மே 11 நிலவரப்படி 12.13 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 30 கன அடி நீர் வரத்து இருக்கும் நிலையில், 05 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. தொடர் நீர் வரத்தால் மே 11 நிலவரப்படி 22.8 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 393 கன அடி நீர் வரத்து உள்ளது.



உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. மே 11 நிலவரப்படி 40.82 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 709 கன அடி நீர் வரத்து இருக்கும் நிலையில், 257 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...