சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. ஆண்டுதோறும் 24 மணிநேர ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தவும், வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிங்கப்பூரில் பங்கேற்க வாய்ப்பு வழங்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் 12.05.2026 அன்று கல்லூரி வளாகத்தில் கையெழுத்தானது.

இந்நிகழ்வில் SNR Sons அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் Dr. Sundhar Ramakrishnan மற்றும் iGenius AI Private Limited இன் இயக்குநர் & முதன்மை கட்டமைப்பாளர் Kalirajan Panchalingam ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.


இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, iGenius AI Private Limited உடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் 24 மணிநேர ஹேக்கத்தான் போட்டிகளை நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தொழில், புதுமை மற்றும் உட்கட்டமைப்பு, தரமான கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட 17 SDG Goals ஐ அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் தங்களின் தொழில்நுட்ப மற்றும் படைப்பாற்றல் திறன்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை இந்த ஒப்பந்தம் வழங்குகிறது.


இந்த ஒப்பந்தத்தின் மூலம் 24 மணிநேர ஹேக்கத்தானில் தேர்வு செய்யப்படும் முதல் மூன்று அணிகளை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் சிங்கப்பூரில் நடைபெறும் அறிவியல் மற்றும் புதுமை போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும். சிங்கப்பூரில் நடைபெறும் அறிவியல் மற்றும் புதுமை போட்டியில் பங்கேற்கும் மாணவர்களின் பயணம், விசா மற்றும் பிற ஏற்பாடுகள் அனைத்தையும் iGenius நிறுவனம் மேற்கொள்ளும்.


சிறந்த திறமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில், iGenius நிறுவனம் இலவச Microsoft இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளையும், நேரடி தொழில்துறை திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்பையும் வழங்கும். இது மாணவர்களுக்கு நடைமுறை அனுபவத்தையும், உலகளாவிய தொழில் வாய்ப்புகளையும் பெற உதவும்.


இப்புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் Dr. P.L. Sivakumar, தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் N. Sumathi ஆகியோர் உடனிருந்தனர். இந்த கூட்டு முயற்சி மாணவர்களுக்கு புதிய தொழில்நுட்ப திறன்களை வளர்க்கவும், சர்வதேச அளவில் போட்டியிடவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...