பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்ளி கொலை செய்த சம்பவம் நடந்தது. கோட்டூர் போலீசார் குற்றவாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.


Coimbatore: பொள்ளாச்சி அருகே குடும்ப பூசல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஒரு இளைஞரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியை கோட்டூர் போலீசார் கைது செய்துள்ளனர்.




கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (56). இவருடைய மகன் தமிழ்ச்செல்வன். அதே பகுதியில் அருகில் ஆனந்த் (29) என்பவர் தனது மனைவி பிரியாவுடன் வசித்து வந்தார்.




தமிழ்ச்செல்வனுக்கும் ஆனந்தின் மனைவி பிரியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது தொடர்பாக இரு குடும்பங்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.




இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆனந்த் மது போதையில் பாலகிருஷ்ணன் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டார். தகராறின் போது ஆனந்த் பாலகிருஷ்ணனை தள்ளியதில் அவர் கீழே விழுந்து தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது.




சம்பவத்திற்குப் பிறகு பாலகிருஷ்ணன் தனது மூத்த மகள் தமிழ்ச்செல்வி வீட்டிற்கு சென்று ஆனந்த் தன்னை அடித்துவிட்டதாகவும், உடல் சோர்வாக இருப்பதாகவும் கூறினார். உடனடியாக தமிழ்ச்செல்வி தனது தந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.




ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பாலகிருஷ்ணன் உயிரிழந்துவிட்டார். உடனடியாக தகவலறிந்த கோட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலகிருஷ்ணனின் உடலை மீட்டு கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.




இது தொடர்பாக கோட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் குற்றவாளி ஆனந்த் கைது செய்யப்பட்டு மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Newsletter

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...