வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காட்டூர் சூரியன்காடு பகுதியில் கஞ்சா விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு, கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்குப் பின் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காட்டூர் சூரியன்காடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்குச் சென்ற போலீசார், காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரது வீட்டின் அருகே சுமார் 7 அடி உயரமுள்ள கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது. அந்த செடியை அங்கேயே தீ வைத்து அழித்தனர். இதுதொடர்பாக கோவிந்தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றஞ்சாட்டப்பட்ட கோவிந்தனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞர் வெ.சிவகுமார் ஆஜரானார். இந்த தீர்ப்பு போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...