வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவருக்கு கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காட்டூர் சூரியன்காடு பகுதியில் கஞ்சா விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு, கோவை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்குப் பின் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காட்டூர் சூரியன்காடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்குச் சென்ற போலீசார், காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அவரது வீட்டின் அருகே சுமார் 7 அடி உயரமுள்ள கஞ்சா செடி வளர்க்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது. அந்த செடியை அங்கேயே தீ வைத்து அழித்தனர். இதுதொடர்பாக கோவிந்தன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றஞ்சாட்டப்பட்ட கோவிந்தனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சிறப்பு வழக்குரைஞர் வெ.சிவகுமார் ஆஜரானார். இந்த தீர்ப்பு போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...