கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் வீரகேரளம் மற்றும் காரமடை பகுதிகளைச் சேர்ந்த இருவரை கைது செய்தனர். ஏணியை துண்டாக்குவதற்காக தண்டவாளத்தில் வைத்ததாக விசாரணையில் தெரியவந்தது.


Coimbatore: கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த விவகாரத்தில், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர். பழைய இரும்பு சேகரிப்பு தொழில் செய்யும் இவர்கள் ஏணியை துண்டாக்குவதற்காக இவ்வாறு செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த மே 9ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில், கோவை வடக்கு மற்றும் பீளமேடு இடையே வந்த அதிவிரைவு ரயில், தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த அலுமினிய ஏணி மீது மோதியது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, பாதுகாப்புப் படையினர் சேதமடைந்த ஏணியை அப்புறப்படுத்திய பின்னர், ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

இந்த சம்பவம் தொடர்பாக, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ரயில்வே சொத்துகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, இருவரது உருவம் பதிவாகியிருந்தது கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ரத்தினபுரி ரயில்வே மேம்பாலப் பகுதியில் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அந்த பாலத்தின் அடியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் தங்கியிருந்த வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (35), காரமடை பகுதியைச் சேர்ந்த கந்தசாமி (45) ஆகிய இருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது இவர்களின் உருவம் ஒத்துப்போனது தெரியவந்தது. விசாரணையில், மது பாட்டில்கள் மற்றும் பழைய இரும்புப் பொருள்களை சேகரித்து விற்பனை செய்யும் இவர்கள், கடந்த 9ஆம் தேதி ஒரு அலுமினிய ஏணியை பழைய இரும்புக் கடையில் விற்க முயன்றதாக தெரியவந்தது.

ஆனால், கடைக்காரர் அதை முழுமையாக வாங்க மறுத்து, துண்டுகளாக வெட்டி வருமாறு கூறியுள்ளார். ஏணியை துண்டாக்குவதற்காக எளிதான வழியைத் தேடிய இவர்கள், தண்டவாளத்தில் வைத்து ரயில் ஏறி அது உடையட்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...