அதிமுக கூட்டணி?: தவெகவை நம்பி வாக்களித்த மக்களிடையே அதிருப்தி ஏற்படும்- காங்கிரஸ் தலைவர் கருத்து

ஊழலற்ற ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வாக்களித்துள்ளனர், எனவே த.வெ.க மற்றும் அதிமுக இடையிலான கூட்டணி குறித்து வெளியாகும் தகவல்கள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்று மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.


சென்னை: தமிழக மக்கள் ஊழலுக்கும், பாஜக அரசின் மதவாத அரசியலுக்கும் எதிராக மற்றும் மாற்றத்தை விரும்பி த.வெ.க-வுக்கு வெற்றியை வழங்கியுள்ள நிலையில், அதிமுகவுடனான கூட்டணி குறித்து எழும் தகவல்கள் மக்களிடையே அதிருப்தியை உருவாக்கும் என மாநிலகாங்கிரஸ் பொதுச்செயலாளர் கணபதி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

முதல்வராக பதவியேற்ற பின்னர் அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து அரசியல் நாகரிகத்தை வெளிப்படுத்திய தவெக தலைவர்விஜயின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், அதிமுக நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோரை நேரில் சந்தித்தது, த.வெ.க-வுக்கு வாக்களித்த மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளாக பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக, ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் வேறு வழக்குகளில் சிக்கியிருந்ததாகவும், அத்தகைய கட்சியுடன் கூட்டணி அமைப்பது மக்களின் எதிர்பார்ப்புக்கு எதிரானதாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஊடகங்களில் வெளியாகும் தகவல்களைப் போல அதிமுகவின் ஒரு பிரிவினருடன் கூட்டணி அமைத்து அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டால், இதுவரை ஆட்சி செய்த ஊழல் கட்சிகளுக்கும் தற்போதைய அரசுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்ற எண்ணம் மக்களிடையே உருவாகும் என்றும் எச்சரித்துள்ளார்.

எனவே, த.வெ.க அரசு தனது முடிவுகளை மறுபரிசீலனை செய்து, ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை வழங்க உறுதியாக இருக்க வேண்டும் என்றும் கணபதி சிவக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...