குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட்டில் இருந்து குறிச்சி குளத்திற்கு செல்லும் 3.27 கி.மீ நீளமுள்ள கால்வாயில் மழைநீர் தடையின்றி செல்ல தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர்.


Coimbatore: மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் குறிச்சி அணைக்கட்டு பகுதியில் இருந்து குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் கால்வாய் தூர்வாரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தனர்.






தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் படி,கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளில் மழைக்காலங்களில் மழைநீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.






அந்த வகையில், நொய்யல் ஆற்றில் அமைந்துள்ள குறிச்சி அணைக்கட்டு பகுதியில் இருந்து குறிச்சி குளத்திற்கு நீர் எடுத்துச் செல்லும் புட்டுவிக்கி சாலையில் அமைந்துள்ள நீர் வரத்து கால்வாயில் தூர்வாரும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.






மழைக்காலங்களில் தங்கு தடையின்றி நீர் செல்லும் வகையில் சுமார் 3.27 கி.மீ நீளத்திற்கு கால்வாய் பகுதிகளில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் மற்றும் புதர்கள் அகற்றும் பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.




இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.




இந்த ஆய்வின்போது, உதவி ஆணையர் தட்சணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் விசாலி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...