நொய்டா தொழிலாளர்களுக்கு ஆதரவாக கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் போராடும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Coimbatore: உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டா பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துபோராடி வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், தொழிலாளர்களின் மீதான அடக்குமுறையை கண்டிப்பதாக, கோவையில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் சார்பில் கண்டன வாயிற்கூட்டம் நடைபெற்றது.



கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பிஜிஎம் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.



நொய்டா தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நடைபெறும் தொழிலாளர் போராட்டங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு உரிய தீர்வு காண வேண்டும் என்றும், குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ.26,000 வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், காண்ட்ராக்ட் மற்றும் பயிற்சி என்ற பெயரில் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதை நிறுத்த வேண்டும், அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஒப்பந்த முறைக்கு பதிலாக நிரந்தர பணியை உறுதி செய்ய வேண்டும், எட்டு மணி நேர வேலை சட்டப்பூர்வமாக அமல்படுத்த வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், தொழிலாளர் நலனுக்கு எதிரான புதிய நான்கு தொழிலாளர் சட்டங்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ. குடியரசு தலைமை தாங்கினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில தலைவர் எஸ். மகேஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் பாபு ஏ. ராதாகிருஷ்ணன், பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்க மாவட்ட நிர்வாகி வி. வெங்கட்ராமன் மற்றும் பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ஒய். அப்துல் முத்தலிப் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...