கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் கால்வாய் தூர்வாரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். திருச்சி சாலை மற்றும் செல்வசிந்தாமணி குளம் உள்ளிட்ட இடங்களில் ஆகாயத் தாமரை அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன.


Coimbatore: முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி Coimbatore மாநகராட்சிப் பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் IAS மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran IAS ஆகியோர் இப்பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.





முதலில், கிழக்கு மண்டலம் திருச்சி சாலை நெசவாளர் காலனி பட்டணம் இட்டேரி பகுதியில் அமைந்துள்ள நீர் வரத்து கால்வாயை ஆய்வு செய்தனர். மழைக்காலத்தில் நீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் சுமார் 2.3 கிலோமீட்டர் நீளத்திற்கு கால்வாய் பகுதிகளில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் மற்றும் புதர்கள் அகற்றும் பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



தொடர்ந்து, மத்திய மண்டலம் வார்டு எண் 80-க்குட்பட்ட செல்வசிந்தாமணி குளத்தில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளையும் ஆய்வு செய்தனர். செல்வசிந்தாமணி குளத்திலிருந்து உக்கடம் பெரியகுளம் செல்லும் இராஜவாய்க்கால் சுமார் 1.7 கிலோமீட்டர் நீளத்திற்கு கால்வாய் பகுதிகளில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகள் மற்றும் புதர்கள் அகற்றப்பட்டு வருகின்றன.



ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் கால்வாய் தூர்வாரும் பணிகளை விரைவாக நிறைவு செய்யுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர். மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர்கள் குமரேசன், திருகல்யாணசுந்தரம், யோகசித்ரா, உதவி பொறியாளர்கள் நாகேந்திரன், செல்வி ரோஜா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர்.





மழைக்காலத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் இந்த தூர்வாரும் பணிகள், Coimbatore நகரில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...